(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 27, 2016

ராமேசுவரம் - சென்னை பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி - எம்.பி!!

1 comment :
ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே புதன்கிழமை மேலும்  தெரிவித்ததாவது: 


ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில், சென்னைக்கு காலை 7 மணிக்கு சென்று சேரும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் அதிவிரைவு ரயிலாகவும்  மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், ராமேசுவரத்திலிருந்து இரவு 8.15 மணிக்கும், சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கும் புறப்படுகிறது.

ராமேசுவரம்-மதுரை-ராமேசுவரம் இடையே செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.   ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ராமேசுவரம்-சென்னை-ராமேசுவரம் பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து இரவு 9.40-க்கு புறப்படும் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில், இரவு 7,15 மணிக்கு புறப்படும் வகையில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்துக்கு காலை 7.30 மணிக்கு வந்து சேரும்.

ராமேசுவரம்-பாலக்காடு-ராமேசுவரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் இரவு நேர பயணிகள் ரயிலும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

1 comment :

kartik said...

Ramnad Railway station Platforms need replacement for smoother movement of trolly, why no body is bothering on that. See the Road opposite to Ramnad OMNI bus stand, Obviously all VIPs in the Town moving on this road no body care to bother.

Post a Comment