(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 26, 2016

ராமநாதபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது, ஹவாலா பணமா??

No comments :
ராமநாதபுரத்தில் அரசுப்பேருந்தில் வெள்ளிக்கிழமை ரூ.13 லட்சம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை போலீஸார் கைப்பற்றினர். அவை ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பாரதியார் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் வெங்கடேசன் (40). மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநரான இவர் மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு அரசுப்பேருந்தை ஓட்டிச்சென்றார்.  

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் மதுவிலக்குப் போலீஸார் பேருந்தில் சோதனை நடத்தினர். போலீஸார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் இருந்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தனர்.  


அதில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் 13 வீதம் ரூ.13 லட்சம் இருந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், மதுரை பேருந்து நிலையத்தில் ஒருவர் பொட்டலத்தைக் கொடுத்து ராமநாதபுரம் மதுரையார் தெருவில் வசிக்கும் வெற்றிவேல் மகன் நித்தியானந்தம் (42) என்பவரிடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

இதன்பேரில் போலீஸார் நித்தியானந்தத்தைப் பிடித்து விசாரணை நடத்தியதில், மதுரையை சேர்ந்த புகாரி என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள ரசாக் தாகா என்பவரிடம் பார்சலை ஒப்படைக்குமாறு கூறியதாகவும்,பணம் என்னுடையது கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ரூ.13 லட்சத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து நித்தியானந்தத்திடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நித்தியானந்தம் குறிப்பிட்ட இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.  
 பேருந்தில் கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருமான வரித்துறை அதிகாரி சி.பாண்டி தலைமையிலான குழுவினரும் கேணிக்கரை காவல் நிலையத்தில் நித்தியானந்தத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மேலும் சிலர் சிக்குவார்கள் எனவும் காவல்தறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment