(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 28, 2017

ராமநாதபுர மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை!!

No comments :
ராமநாதபுர மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7 மணி வரை இடை விடாமல் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருந்தது.

ராமேசுவரம் கோவிலின் தெற்கு ரதவீதி சாலை, நகராட்சி அலுவலகம் அருகில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

இதனால் அனைத்து வாகனங்களும் மழை நீரில் தத்தளித்தடி படியே சென்றன. ஒரே நாளில் தொடர்ச்சியாக ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடியே அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், கீழக்கரை பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment