(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 24, 2017

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் ராமநாதபுர மாவட்டம்!!

No comments :
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் அனைத்து பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீரும், பருவமழையும் இல்லாமல் போனதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதன்காரணமாக மக்கள் குடிநீருக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீரை தேடி அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் மாவட்ட மக்களின் தண்ணீருக்கான தேவையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தண்ணீர் தேவைக்கான கோரிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளதால் இருக்கின்ற நீர்ஆதாரத்தினை தற்காத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

எதிர்கால தேவைக்காக மட்டுமல்லாமல் தற்போதைய தேவைக்கும் தண்ணீரை பாதுகாக்க வேண்டிய எண்ணம் மக்களிடம் மேலோங்க வேண்டும். இதன்காரணமாக தற்போது கைகொடுத்து கொண்டிருக்கும் நீர்ஆதாரங்களை காப்பாற்ற மக்கள் குரல் கொடுக்க வேண்டும். நிலத்தடி நீர், நல்ல தண்ணீராக உள்ள பகுதி மக்கள் தங்களின் குடிநீர் தேவையை, நிலத்தடி நீரின் மூலம் நிறைவேற்றி கொள்கின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில தனியார் நிறுவனத்தினர், தங்களது நிலத்தில் உள்ள குடிநீரை மோட்டார் மூலம் எடுத்து விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. நாள் தோறும் விடிய விடிய 100–க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தண்ணீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதோடு, தண்ணீரின் சுவையும் உப்புத் தன்மையாக மாறி வருகிறது.

எனவே தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்தி, நிலத்தடிநீர் ஆதாரத்தினை காக்க வேண்டும். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment