(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 28, 2017

ராமநாதபுரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை!!

No comments :

ராமநாதபுரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ள நிலையில், மதுரை, ராமேஸ்வரம் உட்பட வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பயணிகள் தினந்தோறும் ராமநாதபுரம் வருகின்றனர். 

ரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் பயணிகள் உட்காருவதற்கு போதுமான வசதிகள் இருந்தாலும் மேற்கூரைகள் குறைவான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் திறந்தவெளியில் நிற்க வேண்டியுள்ளது. இருக்கின்ற சேர்களுக்கு அருகில் தெருநாய்கள் உறங்குகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன்  வரவேண்டியுள்ளது. 

இதுதவிர  பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகள் எதுவும் முறையாக செய்துதரப்படவில்லை. கழிவறைகள் கட்டப்பட்டும் தண்ணீர் வசதி இல்லாததால் அவைகள் பூட்டியே கிடக்கின்றன. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவது கிடையாது.

இதனால் இரவில் வரும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து  வருகின்றனர். தெருநாய்கள் உள்ளே வருவதை தடை செய்தும், அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும் பயணிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment