(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 3, 2015

இரவு நேரங்களில் பஸ்கள் மண்டபம் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

No comments :
மண்டபம், : இரவு நேரங்களில் பஸ்கள் மண்டபம் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. மண்டபம் நகர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் பிர்தவ்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட அமைப்பாளர் பக்கீர் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 



நகர் தலைவராக நசீர், செயலாளராக ஹாரீஸ் கான், பொருளாளராக ராஜா முகமது, துணைத்தலைவராக ஜெய்னுல் ஆப்தீன், துணைச் செயலாளராக மீஸ்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இந்த கூட்டத்தில் மண்டபம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் இரவு நேரங்களில் வந்து செல்ல வேண்டும்; மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


No comments :

Post a Comment