(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 3, 2015

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு களவிளம்பரத்துறை கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக, பிரதமரின் மக்கள் நிதி திட்டம், தூய்மையான பாரதம் மற்றும் பெண் சிசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி தலைமை வகித்தார். சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், இயக்குநர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ராமசந்திரன்,மாவட்ட சமூக நல அலுவலர் மலையரசி, கள விளம்பர அலுவலர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஆனந்த் வரவேற்றார்.

No comments :

Post a Comment