(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 29, 2015

பறவைகளை வேட்டையாடிய திருப்புல்லாணி வாலிபர் கைது!!

No comments :

ராமநாதபுரம் அருகே பறவைகளை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளை தேடி பறவைகள் வந்தவண்ணம் உள்ளன. அழிந்து வரும் இனங்களில் உள்ள இந்த பறவைகளை மருத்துவ குணம் உள்ளதாக நம்பி கறிக்காக சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 




ராமநாதபுரம் அருகே உள்ள பொக்கானரேந்தல் அய்யனார்கோவில் காட்டுப்பகுதியில் வனச்சரகர் கணேசலிங்கம் தலைமையில், வனக்காப்பாளர்கள் காதர்மஸ்தான், கார்மேகம், வேட்டை தடுப்பு காவலர்கள் நவநீதன், அழகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வலை விரித்து உள்ளான் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக திருப்புல்லாணி இந்திராநகரை சேர்ந்த புல்லாணி மகன் ராஜபாண்டி(வயது30) என்பவரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 உள்ளான் பறவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். லோடுமேன் வேலை பார்த்து வரும் ராஜபாண்டி உடல் வலிமை பெறுவதற்காக தனது குழந்தைகள் விரும்பி கேட்டதால் இரவு நேரத்தில் இந்த பறவைகளை பிடிக்க வந்ததாக தெரிவித்தார். வேட்டையாட தடைவிதிக்கப்பட்டுள்ள இந்த பறவைகளை வனத்துறையினர் மீண்டும் காட்டுப்பகுதியில் பறக்க விட்டனர். 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment