(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 26, 2015

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்க!!

No comments :
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் வரவிருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை கூறியதாவது:

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.


இந்த மருத்துவமனைக்கு
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமையும்,
புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் சனிக்கிழமையும் வருகின்றனர்.
சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்களான இந்துஜா சனிக்கிழமையும், முரளீதரன் வெள்ளி,சனிக்கிழமை என இரு நாள்களும் வருகின்றனர்.
உணவுக் குழாய் மருத்துவ சிகிச்சை நிபுணர் மருத்துவர் சமீம்அகமது ஞாயிற்றுக்கிழமைதோறும் வருகிறார்.
உணவுக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள் கண்ணன் வியாழக்கிழமைதோறும், சந்திரன் செவ்வாய்க்கிழமைதோறும் 

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குகின்றனர்.


தேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதால் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment